அலட்சியம் வேண்டாம்.. அதிகாரிகளுக்கு கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் எச்சரிக்கை..!

மக்கள் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் அதிகாரிகள் அலட்சியத்துடன் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிழக்கு மண்டல கூட்டத்தில் மண்டல தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



கோவை: கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல கூட்டம், சிங்காநல்லூரில் உள்ள மண்டல அலுவலகத்தில், மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் தலைமையில் நடைபெற்றது.

இதில், 60 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சிங்கை சிவா கூறியதாவது:-

கோவை வார்டுகளில் குடிநீர் பிரச்சினை இருப்பதாகவும், அதேசமயம், அதிமுக பிரமுகர்களின் வீடுகளுக்கு லாரியில் குடிநீர் தண்ணீர் மாநகராட்சி ஊழியர்கள் வழங்குகின்றார்கள் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

மாமன்ற உறுப்பினர் திராவிடன் பாபு கூறியதாவது:-

விளாங்குறிச்சி சாலை குண்டும், குழியுமாக உள்ளது, இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றது. உயிரிழப்பு ஏற்பட்டால் தான் இதை சரி செய்வீர்கள் என கேள்வி எழுப்பினார்.

அதனை தொடர்ந்து 8 வது வார்டு மாமன்ற உறுப்பினர் விஜயகுமார் கூறியதாவது:-

தனது வார்டில் குடிநீர் பிரச்சினை உள்ளது. தனது சொந்த செலவிலும் பல பணிகளை மேற்கொண்டுள்ளேன். 5 ஆண்டுகளுக்கு பிறகு மாமன்ற உறுப்பினராக வந்துள்ளதால், மாமன்ற உறுப்பினர்களிடம் அதிக பணிகளை மக்கள் எதிர்பார்க்கின்றனர். மக்களுக்கு சேவையாற்ற நாங்கள் வந்துள்ளோம், அவர்களுக்கு சேவையாற்ற அதிகாரிகளான உங்களின் ஒத்துழைப்பு தேவை என கூறினார்.

மேலும், தூய்மை பணியாளர்களை வார்டுகளில் அதிகப்படுத்த வேண்டும், குப்பை எடுக்கும் லாரிகளுக்கு 35 லிட்டர் டீசல் மட்டுமே ஒரு நாளைக்கு வழங்குகின்றனர். டீசல் குறைந்தவுடன் சென்று விடுகின்றனர். எனவும், 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க வேண்டும், என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

இதைத்தொடர்ந்து மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் கூறியதாவது:-



கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல அதிகாரிகள் போனை எடுப்பதில்லை. அதிமுக ஆதரவு அதிகாரிகளாகவே உள்ளனர்.



அவர்களின் நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் அதிகாரிகள் அலட்சியத்துடன் செயல்பட்டால், முதல்வரின் கவனத்திற்கு நேரிடையாக கொண்டு சென்று கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், பொதுமக்களின் பல்வேறு விண்ணப்பங்கள் கிடப்பில் உள்ளது. அந்த விண்ணப்பங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடத்தில் வலியுறுத்தினார்.



இந்த கூட்டத்தில், உதவி ஆணையாளர் மாரிச்செல்வி, உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி, உதவி செயற்பொறியாளர் சுந்தர்ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் பாக்கியா தனபால், தீபா இளங்கோ மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், பொறியாளர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...