திருப்பூரில் அங்கன்வாடி மையத்தில் பொருள்கள் திருட்டு..!

சாமிநாதபுரத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் கேஸ் அடுப்பு, சிலிண்டர் மற்றும் சமையலுக்குத் தேவையான பாத்திரங்கள், மளிகை பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூரில் அங்கன்வாடி மையத்தில் நடந்த திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் பெரியார் காலனி பகுதியில் உள்ள சாமிநாதபுரத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் 40-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று இரவு அங்கன்வாடி மையத்தில் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கிருந்த கேஸ் அடுப்பு, சிலிண்டர், முட்டை, அரிசி உள்ளிட்ட மளிகை சாமான்கள் மற்றும் சமையலுக்குப் பயன்படுத்தக் கூடிய பாத்திரங்கள் அனைத்தையும் திருடிச் சென்றுள்ளனர்.



இன்று காலை அங்கன்வாடி ஊழியர்கள் மையத்தைத் திறந்து பார்த்தபோது பொருட்கள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அனுப்பர்பாளையம் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்ததை அடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று இரவு மர்ம ஆசாமிகள் சமையலுக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் திருடிச் சென்றதன் காரணமாக இன்று மாணவ-மாணவிகளுக்கு உணவு சமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து அருகிலுள்ள மற்றொரு அங்கன்வாடியில் உணவு சமைத்து மாணவ-மாணவிகளுக்காகக் கொண்டுவரும் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...