24-மணி நேர 'சிறுவாணி குடிநீர் குழாய்' இணைப்பு: கோவை மாநகராட்சி துணைமேயருக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்..!

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 87-வது வார்டில் கூடுதலாக 24-மணி நேர சிறுவாணி குடிநீர் குழாய் இணைப்பு அமைக்கப்பட்டுள்ளதற்கு துணைமேயருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.


கோவை: கோவை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் பொது குடிநீர் குழாய்கள் மூலம்24-மணி நேர சிறுவாணி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.



இந்நிலையில் கோவை மாநகராட்சி 87-வது வார்டு காந்திநகர் பகுதியிலும் பொது குழாய் மூலம் 24-மணி நேர சிறுவாணி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் அங்கு அதிகளவு பொதுமக்கள் வசிப்பதால் ஒரு குடிநீர் குழாய் போதுமானதாக இருப்பதில்லை எனவும், கூடுதல் குடிநீர் குழாய் வேண்டுமென அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாகக் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் 87-வது வார்டு கவுன்சிலர் பாபுகூடுதல் குடிநீர் குழாய் அமைக்க முயற்சிகள் மேற்கொண்ட நிலையில் தற்போது ஒரு கூடுதல் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது.



இன்று இந்த குடிநீர் குழாயைக் கோவை துணை மேயர் வெற்றி செல்வன் திறந்து வைத்தார். அவருக்கும் மற்ற மாமன்ற உறுப்பினர்களுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் 88-வது வார்டு மாமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...