24-மணி நேர 'சிறுவாணி குடிநீர் குழாய்' இணைப்பு: கோவை மாநகராட்சி துணைமேயருக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்..!

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 87-வது வார்டில் கூடுதலாக 24-மணி நேர சிறுவாணி குடிநீர் குழாய் இணைப்பு அமைக்கப்பட்டுள்ளதற்கு துணைமேயருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.


கோவை: கோவை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் பொது குடிநீர் குழாய்கள் மூலம்24-மணி நேர சிறுவாணி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.



இந்நிலையில் கோவை மாநகராட்சி 87-வது வார்டு காந்திநகர் பகுதியிலும் பொது குழாய் மூலம் 24-மணி நேர சிறுவாணி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் அங்கு அதிகளவு பொதுமக்கள் வசிப்பதால் ஒரு குடிநீர் குழாய் போதுமானதாக இருப்பதில்லை எனவும், கூடுதல் குடிநீர் குழாய் வேண்டுமென அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாகக் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் 87-வது வார்டு கவுன்சிலர் பாபுகூடுதல் குடிநீர் குழாய் அமைக்க முயற்சிகள் மேற்கொண்ட நிலையில் தற்போது ஒரு கூடுதல் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது.



இன்று இந்த குடிநீர் குழாயைக் கோவை துணை மேயர் வெற்றி செல்வன் திறந்து வைத்தார். அவருக்கும் மற்ற மாமன்ற உறுப்பினர்களுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் 88-வது வார்டு மாமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...