பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து 3 நாள் வேலை நிறுத்தம் - கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் நலச்சங்கம் அறிவிப்பு

பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் நலச்சங்கம் சார்பில் ஜேசிபி, பொக்லைன், டோசர் உள்ளிட்ட வாகனங்கள் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.


கோவை: பெட்ரோல், டீசல், காப்பீடு ஆகியவற்றின் விலை உயர்வுக்கு எதிராக ஜேசிபி, பொக்லைன் வாகனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் நலச்சங்கம் சார்பில் மூன்று நாள் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பெட்ரோல், டீசல், உதிரி பாகங்கள், காப்பீடு ஆகியவற்றின் கடும் விலை உயர்வால் அதிக நஷ்டம் ஏற்படுவதாக குற்றம் சாட்டினர்.

மேலும், இதனால் வங்கிக் கடன் கட்ட முடியவில்லை எனக் கூறிய அவர்கள், மத்திய, மாநில அரசுகள் விலையை குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில், ஜேசிபி, பொக்லைன், டோசர் உள்ளிட்ட 1500 எர்த் மூவர்ஸ் வாகனங்களும், அன்னூர் வட்டாரத்தில், 150 வாகனங்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இன்று முதல் 3 நாள் தொடர்ந்து இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...