பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் நலச்சங்கம் சார்பில் ஜேசிபி, பொக்லைன், டோசர் உள்ளிட்ட வாகனங்கள் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
கோவை: பெட்ரோல், டீசல், காப்பீடு ஆகியவற்றின் விலை உயர்வுக்கு எதிராக ஜேசிபி, பொக்லைன் வாகனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் நலச்சங்கம் சார்பில் மூன்று நாள் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பெட்ரோல், டீசல், உதிரி பாகங்கள், காப்பீடு ஆகியவற்றின் கடும் விலை உயர்வால் அதிக நஷ்டம் ஏற்படுவதாக குற்றம் சாட்டினர்.
மேலும், இதனால் வங்கிக் கடன் கட்ட முடியவில்லை எனக் கூறிய அவர்கள், மத்திய, மாநில அரசுகள் விலையை குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில், ஜேசிபி, பொக்லைன், டோசர் உள்ளிட்ட 1500 எர்த் மூவர்ஸ் வாகனங்களும், அன்னூர் வட்டாரத்தில், 150 வாகனங்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இன்று முதல் 3 நாள் தொடர்ந்து இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் நலச்சங்கம் சார்பில் மூன்று நாள் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பெட்ரோல், டீசல், உதிரி பாகங்கள், காப்பீடு ஆகியவற்றின் கடும் விலை உயர்வால் அதிக நஷ்டம் ஏற்படுவதாக குற்றம் சாட்டினர்.
மேலும், இதனால் வங்கிக் கடன் கட்ட முடியவில்லை எனக் கூறிய அவர்கள், மத்திய, மாநில அரசுகள் விலையை குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில், ஜேசிபி, பொக்லைன், டோசர் உள்ளிட்ட 1500 எர்த் மூவர்ஸ் வாகனங்களும், அன்னூர் வட்டாரத்தில், 150 வாகனங்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இன்று முதல் 3 நாள் தொடர்ந்து இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.