கோவை பாலசுந்தரம் சாலையில் கசியும் கழிவு நீரால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதி!

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பாலசுந்தரம் சாலையில் கழவுநீர் கசிவால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.


கோவை: கோவையின் முக்கிய சாலையான பாலசுந்தரம் சாலை. இச்சாலை, ஆவாரம்பாளையம், காந்திபுரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட முக்கிய இடங்களை இணைப்பதுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோவை மாநகராட்சி ஆணையர் அலுவலகம், அரசு மருத்துவமனை என ஏராளமான அரசு அலுவலகங்களுக்கும் செல்ல பயன்படுத்தும் பிரதான சாலை ஆகும்.



இந்த சாலையில், சாக்கடை அடைப்பால் கசியும் கழிவு நீரால், சாலை முழுவதும் கழிவுநீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். சாலை முழுவதும் கழிவுநீர் ஆற்று வெள்ளம் போல் ஓடுவதால், பாதசாரிகள் நடந்து செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கழிவுநீர் தேக்கத்தால் எழும் துர்நாற்றம் காரணமாக, மக்கள் மூக்கை மூடியபடி செல்லவேண்டிய நிலை உருவாகியுள்ளது. மேலும், இது கடும் சுகாதார சீர்கெட்டுக்கு வழிவகுக்கும் என்பதால், உடனடியாக இப்பிரச்சினையை மாநகராட்சி சரிசெய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சார்பாக கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...