கோவையில் 'பயிர் காப்பீடு' மற்றும் 'கிசான் கடன்' அட்டைக்கான சிறப்பு முகாம்..!

கோவையில் பயிர் காப்பீடு மற்றும் கிசான் கடன் அட்டை முகாம் 24-ம் தேதி முதல் 1-ம் தேதி வரை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


கோவை: பயிர் காப்பீடு மற்றும் கிசான் கடன் அட்டைக்கான சிறப்பு முகாம்கள் ஒரு வாரகாலம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், கோவை மாவட்டம் முழுவதும் அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் வேளாண்மை மற்றும் சகோதரர் துறைகளின் மூலம் வருகின்ற 24-ம்தேதி முதல் 1-ம் தேதி வரை ஒரு வாரத்திற்கு மத்திய மாநில அரசுகள் இணைந்து நடத்தும் "சிறப்பு விவசாயிகளின் பங்களிப்பே எமது முன்னுரிமை" என்கிற முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாம்களில் பயிர் காப்பீடு, உழவர் கடன் அட்டை, மண் மாதிரிகள் சேகரித்தல் மற்றும் நுண்ணீர் பாசனத் திட்டம் குறித்தான விரிவான விளக்க காட்சிகள் கருத்தரங்குகள் செயல் விளக்கங்கள் வழங்கப்பட உள்ளதாகவும், உழவர் கடன் அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பயிர் காப்பீடு திட்டத்தின் முக்கிய அம்சங்களான விவசாயிகள் காப்பீடு செய்திடும் வழிமுறைகள், காப்பீடு பெற தகுதிகள், இலக்கியத்திற்கான காரணிகள், இழப்பீடு கணக்கிடும் முறை, காப்பீடு விண்ணப்பத்தின் தற்போதைய நிலையினை அறிய கூடிய வழி வகைகள், புகார்கள், சந்தேகங்கள் ஆகியவற்றுக்கான வழிமுறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கங்கள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே கிராம பஞ்சாயத்து அளவில் நடைபெறக்கூடிய இம்முகாம்களில் விவசாயிகள் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...