'சிறு-குறு தொழில் நிறுவனங்களை பாதுகாத்திட வேண்டும்'-இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோவை - திருச்சி வரை சைக்கிள் பேரணி..!

சிறு-குறு தொழில் நிறுவனங்களை பாதுகாத்திட வேண்டும், அரசு காலிப் பணியிடங்களை நிரப்புதல், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் DYFI சார்பில் மாநிலம் தழுவிய சைக்கிள் பயணம் நடைபெற்றது.



கோவை: "அரசு காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், புதிய வேலைவாய்ப்புகளை நிரந்தர பணியிடங்களாக உருவாக்கிட வேண்டும், சிறு-குறு தொழில் நிறுவனங்களை பாதுகாத்திட வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை விற்கக் கூடாது" என்கின்ற 4 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருச்சியில் மே 1-ம் தேதி மாபெரும் கூட்டம் நடைபெற உள்ளது.



இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழகத்தில் நான்கு மூலைகளில் இருந்து (சென்னை, கன்னியாகுமரி, கோவை, பாண்டிச்சேரி) இருந்து சைக்கிள் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த பயணக்குழுவில் DYFI இன் மாநிலத் துணைச் செயலாளர் சி.பாலசுந்திரபோஸ் தலைவராக பொறுப்பு வகிக்கிறார். கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகம் முன்பு தொடங்கப்பட்ட இந்த பயண குழுவானது துடியலூர் ஆவாரம்பாளையம் சிங்காநல்லூர் வழியாக திருச்சி செல்கிறது.

இந்த சைக்கிள் பயணத்தை DYFI இன் கேரள மாநில செயலாளர் தாமஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அவர்களது கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.



இந்நிகழ்வில் கோவை மாவட்ட DYFI அமைப்பினர், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன்,CITU-கோவை மாவட்ட தலைவர் பத்மநாபன், SFI கோவை மாவட்ட செயலாளர் தினேஷ், உள்ளிட்டோர் கலந்து கொண்டு பயண குழுவிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த பாலசுந்திரபோஸ், ஒன்றிய அரசு 9 லட்சத்தும் மேல் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும், திமுகஅரசு தேர்தல் வாக்குறுதியில் கூறிய ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலை தருவதாக கூறிவிட்டு கடந்த 1 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை வாய்ப்பை வழங்கி உள்ளது.

எனவே,மத்திய மற்றும் மாநில அரசு உடனடியாக வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். மேலும் மத்திய அரசு மத வெறியை தூண்டி விடுதாகவும் அதனை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அனுமதிக்காது என்றும் தெரிவித்தார்.





Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...