பாரதியார் பல்கலைக்கழகத்தில் பெண்கள் விடுதி அருகே இரவில் சுற்றித் திரிந்த மர்ம நபர் கைது.

முதற்கட்ட விசாரணையில், அந்த நபர் மருதமலை சாலை, கல்வீரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுரேந்திரன் வயது 19 என்பதும், பாரதியார் பல்கலை., பெண்கள் விடுதிக்குள் புகுந்து லேப்டாப் செல்போன் போன்ற பொருட்களை திருடி வந்ததும் தெரியவந்துள்ளது.



கோவை: பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பெண்கள் விடுதி அருகே இரவில் சுற்றித் திரிந்த மர்ம நபரை கைது செய்த வடவள்ளி போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மருதமலை சாலையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் இரண்டு பிளாக்குகளில் மாணவிகள் விடுதி உள்ளது. இந்த மாணவியர் விடுதி அருகே, கடந்த சில வாரங்களாக இரவு நேரங்களில் மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் சுற்றி திரிவதாக மாணவிகள் புகார் அளித்து வந்தனர். 

தொடர்ந்து புகார் அளித்து நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாணவிகள் விடுதி வளாகத்தில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் இரவு நேரத்தில் ஒரு மர்ம நபர் விடுதி வளாகத்தில் சுற்றிய வீடியோவுடன் மாணவிகள் புகார் அளித்தனர். 

புகார் அடிப்படையில் வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக சுற்றிய இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, பிடிபட்ட நபர் கல்வீராம்பாளையத்தை சேர்ந்த சுரேந்திரன் (19) என்பது தெரியவந்தது. 

மேலும், அவர் பெண்கள் உடை அணிந்து இரவு நேரத்தில் மாணவிகள் விடுதிக்குள் சென்று லேப்டாப் மற்றும் செல்போன்களை தேடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரவு நேரங்களில் மாணவிகளை அச்சுறுத்தி வந்த மர்ம நபரை போலீசார் கைது செய்ததால் மாணவிகள் நிம்மதி அடைந்துள்ளனர். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...