மாவட்ட எஸ்.பி.பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் நடைபெற்ற சோதனையில், செட்டிபாளையம் பகுதியில் மூதாட்டி ஒருவரது வீட்டில் மளிகை பொருட்கள் வைத்து கொள்வதாக கூறி, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர், 1 டன் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
கோவை: கோவையில் அதிகளவு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வருவதையடுத்து,மாவட்ட எஸ்.பி.பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, செட்டிபாளையம் பெரிய குயிலி பகுதியில் தனியாக வசித்து வரும் மூதாட்டி ஒருவரது வீட்டில் மளிகை பொருட்கள் வைத்து கொள்வதாக கூறி, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட1 டன் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அங்கு ஆய்வு மேற்கொண்ட போலீசார் 1 டன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து ரமேஷ்குமாரை கைது செய்தனர்.
விசாரணையில், அவர் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து குட்காவை கடத்தி வந்து கோவையில் சில்லரை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
சம்பவம் குறித்து, மாவட்ட எஸ்.பி.பத்ரி நாராயணன் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்.