கோவையில் தடை செய்யப்பட்ட 1 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் - ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் கைது.

மாவட்ட எஸ்.பி.பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் நடைபெற்ற சோதனையில், செட்டிபாளையம் பகுதியில் மூதாட்டி ஒருவரது வீட்டில் மளிகை பொருட்கள் வைத்து கொள்வதாக கூறி, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர், 1 டன் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.



கோவை: கோவையில் அதிகளவு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வருவதையடுத்து,மாவட்ட எஸ்.பி.பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, செட்டிபாளையம் பெரிய குயிலி பகுதியில் தனியாக வசித்து வரும் மூதாட்டி ஒருவரது வீட்டில் மளிகை பொருட்கள் வைத்து கொள்வதாக கூறி, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட1 டன் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.



இதையடுத்து, அங்கு ஆய்வு மேற்கொண்ட போலீசார் 1 டன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து ரமேஷ்குமாரை கைது செய்தனர்.

விசாரணையில், அவர் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து குட்காவை கடத்தி வந்து கோவையில் சில்லரை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

சம்பவம் குறித்து, மாவட்ட எஸ்.பி.பத்ரி நாராயணன் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...