கேரளாவில் வரும் மே 1-ஆம் தேதி முதல் பேருந்து, டாக்ஸி மற்றும் ஆட்டோ கட்டணங்களை உயர்த்த அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கேரளா: தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வால், அத்தியாவசியப் பொருட்களின் விலை சற்று அதிகரித்து வருகிறது.
கேரள மாநிலத்தில்பேருந்து மற்றும் ஆட்டோ, டாக்ஸி கட்டணங்கள் உயர்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் நேற்று நடந்த கேரளா அமைச்சரவை கூட்டத்தில் கட்டண உயர்விற்கானஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி வரும் மே 1-ஆம் தேதி முதல் கேரளாவில் பேருந்து மற்றும் ஆட்டோ, டாக்ஸி கட்டணங்கள் உயர்வு அமலுக்கு வருகிறது. அதன்படி பேருந்துகளில் 2.5 கிலோ மீட்டர் தொலைவிற்கு செல்ல ரூ.8 லிருந்து ரூ.10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் கூடுதலாக செல்லும் ஒவ்வொருகிலோ மீட்டருக்கும் 90 பைசாவிலிருந்து ஒரு ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் கேரளா போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான விரைவு பேருந்து, அதிவிரைவு பேருந்து, டீலக்ஸ் பேருந்து கட்டணங்கள் அதற்கு தகுந்தார்போல் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் ஆட்டோ கட்டணம் 1.5 கிலோ மீட்டருக்கு ரூ.25 லிருந்து ரூ.30 உயர்த்தப்பட்டுள்ளது. அதன்பிறகு வரும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.12 ரூபாயிலிருந்து ரூ.15 ஆக உயர்ந்துள்ளது. கால் டாக்ஸி கட்டணமும் ரூ.175 இல் இருந்து ரூ.200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதிக உந்து திறன் கொண்ட டாக்ஸிக்கு ரூ.200 லிருந்து ரூ.225 ஆகவும், கூடுதலாக கிலோமீட்டருக்கு ரூ.15 லிருந்து ரூ.18 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனிடையே பேருந்து, டாக்ஸி, ஆட்டோ கட்டணங்கள் உயர்விற்கு சில மாணவ அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலத்தில்பேருந்து மற்றும் ஆட்டோ, டாக்ஸி கட்டணங்கள் உயர்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் நேற்று நடந்த கேரளா அமைச்சரவை கூட்டத்தில் கட்டண உயர்விற்கானஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி வரும் மே 1-ஆம் தேதி முதல் கேரளாவில் பேருந்து மற்றும் ஆட்டோ, டாக்ஸி கட்டணங்கள் உயர்வு அமலுக்கு வருகிறது. அதன்படி பேருந்துகளில் 2.5 கிலோ மீட்டர் தொலைவிற்கு செல்ல ரூ.8 லிருந்து ரூ.10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் கூடுதலாக செல்லும் ஒவ்வொருகிலோ மீட்டருக்கும் 90 பைசாவிலிருந்து ஒரு ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் கேரளா போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான விரைவு பேருந்து, அதிவிரைவு பேருந்து, டீலக்ஸ் பேருந்து கட்டணங்கள் அதற்கு தகுந்தார்போல் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் ஆட்டோ கட்டணம் 1.5 கிலோ மீட்டருக்கு ரூ.25 லிருந்து ரூ.30 உயர்த்தப்பட்டுள்ளது. அதன்பிறகு வரும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.12 ரூபாயிலிருந்து ரூ.15 ஆக உயர்ந்துள்ளது. கால் டாக்ஸி கட்டணமும் ரூ.175 இல் இருந்து ரூ.200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதிக உந்து திறன் கொண்ட டாக்ஸிக்கு ரூ.200 லிருந்து ரூ.225 ஆகவும், கூடுதலாக கிலோமீட்டருக்கு ரூ.15 லிருந்து ரூ.18 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனிடையே பேருந்து, டாக்ஸி, ஆட்டோ கட்டணங்கள் உயர்விற்கு சில மாணவ அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.