பெட்ரோல் டீசல் விலை உயர்வு எதிரொலி: கேரளாவில் மே 1-ஆம் தேதி முதல் பேருந்து, ஆட்டோ, டாக்ஸி கட்டணம் உயர்வு அமலாகிறது…!

கேரளாவில் வரும் மே 1-ஆம் தேதி முதல் பேருந்து, டாக்ஸி மற்றும் ஆட்டோ கட்டணங்களை உயர்த்த அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


கேரளா: தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வால், அத்தியாவசியப் பொருட்களின் விலை சற்று அதிகரித்து வருகிறது.

கேரள மாநிலத்தில்பேருந்து மற்றும் ஆட்டோ, டாக்ஸி கட்டணங்கள் உயர்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் நேற்று நடந்த கேரளா அமைச்சரவை கூட்டத்தில் கட்டண உயர்விற்கானஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி வரும் மே 1-ஆம் தேதி முதல் கேரளாவில் பேருந்து மற்றும் ஆட்டோ, டாக்ஸி கட்டணங்கள் உயர்வு அமலுக்கு வருகிறது. அதன்படி பேருந்துகளில் 2.5 கிலோ மீட்டர் தொலைவிற்கு செல்ல ரூ.8 லிருந்து ரூ.10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் கூடுதலாக செல்லும் ஒவ்வொருகிலோ மீட்டருக்கும் 90 பைசாவிலிருந்து ஒரு ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் கேரளா போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான விரைவு பேருந்து, அதிவிரைவு பேருந்து, டீலக்ஸ் பேருந்து கட்டணங்கள் அதற்கு தகுந்தார்போல் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆட்டோ கட்டணம் 1.5 கிலோ மீட்டருக்கு ரூ.25 லிருந்து ரூ.30 உயர்த்தப்பட்டுள்ளது. அதன்பிறகு வரும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.12 ரூபாயிலிருந்து ரூ.15 ஆக உயர்ந்துள்ளது. கால் டாக்ஸி கட்டணமும் ரூ.175 இல் இருந்து ரூ.200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதிக உந்து திறன் கொண்ட டாக்ஸிக்கு ரூ.200 லிருந்து ரூ.225 ஆகவும், கூடுதலாக கிலோமீட்டருக்கு ரூ.15 லிருந்து ரூ.18 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனிடையே பேருந்து, டாக்ஸி, ஆட்டோ கட்டணங்கள் உயர்விற்கு சில மாணவ அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...