அறிவிக்கப்படாத மின்வெட்டால், கோவை மக்கள் அவதி: "சற்று நேரத்தில் சரியாகிவிடும்" - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்.

இன்றிரவு மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைப்பட்டதால், பல்வேறு இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் சரியாகி விடும், என்று அமைச்சர் டுவீட் செய்துள்ளார்.

கோவை: 

கோவையில் கோடை வெயில் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், நகரின் பல்வேறு இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருவதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதே போல, இன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டதால், மீண்டும் தொடர் மின்வெட்டு வந்துவிடுமோ..? என்ற அச்சத்தில் இருந்து வந்தனர். 

இந்தநிலையில், மக்கள் யாரும் கவலை பட வேண்டாம், இன்னும் சற்று நேரத்தில் மின்சாரம் வந்து விடும் என்ற மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி டுவீட் மூலம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,"இன்றிரவு மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைப்பட்டது. 

இதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க, மின் வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக அதிகரித்தும், தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதனால், நகர்ப்புறங்களில் உடனடியாக நிலைமை சரி

செய்யப்பட்டது. ஊரகப் பகுதிகளிலும் அடுத்த 15 நிமிடங்களில் நிலைமை சீரடையநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது", என்று விளக்கமளித்துள்ளார். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...