கோவையில் 'மனைவியுடன் பேசாதே' என்று நண்பனிடம் கூறிய கணவருக்கு கத்திக் குத்து!

கோவையில் தனது மனைவியுடன், நண்பர் பேசியதை கண்டித்த கணவரை, அந்த நண்பர் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிய சம்பவம் இரத்தினபுரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: கோவையில் தனது மனைவியுடன், நண்பர் பேசியதை கண்டித்த கணவரை, கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிய நண்பரால், இரத்தினபுரி பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

கோவை, ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் குணா (எ) தனசேகரன், ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். அவரது நண்பர் வெள்ளலூரை சேர்ந்த சந்தோஷ். இவர்கள் இருவரும், குணா வீட்டில் மது அருந்துவது வழக்கம். இதனிடைய, சந்தோஷுக்கும், குணா மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதைப் பார்த்த குணா, தனது மனைவியை கண்டித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று சந்தோஷ் மற்றும் குணாவின் மனைவியும் பேசிக் கொண்டிருந்ததை பார்த்த குணா, சந்தோஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும், வாக்குவாதம் முற்றி, இருவரிடையே கைகலப்பு ஏற்பட்டது.

அப்போது, சந்தோஷ், குணாவை கத்தியால் குத்தி தாக்கி விட்டு தப்பிச் சென்றார். இதுகுறித்து, குணா ரத்தினபுரி போலீசாரிடம் புகார் அளித்ததன் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் சந்தோஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...