கோவையில் தனது மனைவியுடன், நண்பர் பேசியதை கண்டித்த கணவரை, அந்த நண்பர் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிய சம்பவம் இரத்தினபுரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை: கோவையில் தனது மனைவியுடன், நண்பர் பேசியதை கண்டித்த கணவரை, கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிய நண்பரால், இரத்தினபுரி பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
கோவை, ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் குணா (எ) தனசேகரன், ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். அவரது நண்பர் வெள்ளலூரை சேர்ந்த சந்தோஷ். இவர்கள் இருவரும், குணா வீட்டில் மது அருந்துவது வழக்கம். இதனிடைய, சந்தோஷுக்கும், குணா மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதைப் பார்த்த குணா, தனது மனைவியை கண்டித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று சந்தோஷ் மற்றும் குணாவின் மனைவியும் பேசிக் கொண்டிருந்ததை பார்த்த குணா, சந்தோஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும், வாக்குவாதம் முற்றி, இருவரிடையே கைகலப்பு ஏற்பட்டது.
அப்போது, சந்தோஷ், குணாவை கத்தியால் குத்தி தாக்கி விட்டு தப்பிச் சென்றார். இதுகுறித்து, குணா ரத்தினபுரி போலீசாரிடம் புகார் அளித்ததன் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் சந்தோஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை, ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் குணா (எ) தனசேகரன், ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். அவரது நண்பர் வெள்ளலூரை சேர்ந்த சந்தோஷ். இவர்கள் இருவரும், குணா வீட்டில் மது அருந்துவது வழக்கம். இதனிடைய, சந்தோஷுக்கும், குணா மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதைப் பார்த்த குணா, தனது மனைவியை கண்டித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று சந்தோஷ் மற்றும் குணாவின் மனைவியும் பேசிக் கொண்டிருந்ததை பார்த்த குணா, சந்தோஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும், வாக்குவாதம் முற்றி, இருவரிடையே கைகலப்பு ஏற்பட்டது.
அப்போது, சந்தோஷ், குணாவை கத்தியால் குத்தி தாக்கி விட்டு தப்பிச் சென்றார். இதுகுறித்து, குணா ரத்தினபுரி போலீசாரிடம் புகார் அளித்ததன் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் சந்தோஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.