கோவை காவலர் பயிற்சி பள்ளியில் இரண்டாம் நிலை பெண் காவலர்களுக்கான பயிற்சி - உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு!

கோவை காவலர் பயிற்சிப் பள்ளியில் 184 இரண்டாம் நிலை பெண் காவலர்களுக்கு அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சிகளை காவல்துறை உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.


கோவை: தமிழ்நாடு காவல் துறையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 10,484 இரண்டாம் நிலை ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கான அடிப்படை பயிற்சி தமிழ்நாடு முழுவதும் 8 நிரந்தர காவலர் பயிற்சி பள்ளி மற்றும் 35 தற்காலிக காவலர் பயிற்சிப் பள்ளியில் கடந்த மார்ச் 16 தேதி முதல் துவங்கப்பட்டு 8 மாதங்களாக நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, கோவை காவலர் பயிற்சிப் பள்ளியில் 184 இரண்டாம் நிலை பெண் காவலர்களுக்கு அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

இதனை, காவல்துறை கூடுதல் இயக்குநர் (காவல் உயர் பயிற்சியகம்) மற்றும் (பொறுப்பு) காவல் துறை இயக்குனர் (பயிற்சி) அமல்ராஜ் ஐ.பி.எஸ் மற்றும் காவல்துறை தலைவர் (பயிற்சி) அருண் ஐ.பி.எஸ் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, பெண் காவலர்களுக்கு சட்ட வகுப்பு நடப்பதை பார்வையிட்டு அவர்களுக்கு அறிவுரையும் வழங்கினர்.

அவர்களுடன், கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப் குமார், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் மற்றும் கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் முத்துசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...