கோவை காவலர் பயிற்சிப் பள்ளியில் 184 இரண்டாம் நிலை பெண் காவலர்களுக்கு அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சிகளை காவல்துறை உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
கோவை: தமிழ்நாடு காவல் துறையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 10,484 இரண்டாம் நிலை ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கான அடிப்படை பயிற்சி தமிழ்நாடு முழுவதும் 8 நிரந்தர காவலர் பயிற்சி பள்ளி மற்றும் 35 தற்காலிக காவலர் பயிற்சிப் பள்ளியில் கடந்த மார்ச் 16 தேதி முதல் துவங்கப்பட்டு 8 மாதங்களாக நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கோவை காவலர் பயிற்சிப் பள்ளியில் 184 இரண்டாம் நிலை பெண் காவலர்களுக்கு அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
இதனை, காவல்துறை கூடுதல் இயக்குநர் (காவல் உயர் பயிற்சியகம்) மற்றும் (பொறுப்பு) காவல் துறை இயக்குனர் (பயிற்சி) அமல்ராஜ் ஐ.பி.எஸ் மற்றும் காவல்துறை தலைவர் (பயிற்சி) அருண் ஐ.பி.எஸ் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, பெண் காவலர்களுக்கு சட்ட வகுப்பு நடப்பதை பார்வையிட்டு அவர்களுக்கு அறிவுரையும் வழங்கினர்.
அவர்களுடன், கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப் குமார், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் மற்றும் கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் முத்துசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அதன் ஒரு பகுதியாக, கோவை காவலர் பயிற்சிப் பள்ளியில் 184 இரண்டாம் நிலை பெண் காவலர்களுக்கு அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
இதனை, காவல்துறை கூடுதல் இயக்குநர் (காவல் உயர் பயிற்சியகம்) மற்றும் (பொறுப்பு) காவல் துறை இயக்குனர் (பயிற்சி) அமல்ராஜ் ஐ.பி.எஸ் மற்றும் காவல்துறை தலைவர் (பயிற்சி) அருண் ஐ.பி.எஸ் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, பெண் காவலர்களுக்கு சட்ட வகுப்பு நடப்பதை பார்வையிட்டு அவர்களுக்கு அறிவுரையும் வழங்கினர்.
அவர்களுடன், கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப் குமார், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் மற்றும் கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் முத்துசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.