தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுகாதார திருவிழா, காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. நீரிழிவு, ரத்த அழுத்தம், வாய் புற்றுநோய், காச நோய் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.
கோவை: சுகாதாரத்துறை சார்பில் வட்டார சுகாதார திருவிழா நாளை தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடக்கவுள்ளது.
இதுகுறித்து, தொண்டாமுத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் கனகராணி கூறுகையில், "தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள மக்களுக்கு, 21ம் தேதி காலை, 8 மணி முதல் மாலை 4 மணி வரை சுகாதார திருவிழா நடைபெறவுள்ளது. இம்முகாமில், நோய் கண்டறிதல், மருந்து வழங்குதல், ஆலோசனை வழங்கப்படும்.
பல் பரிசோதனை, கண் பரிசோதனை, காது, மூக்கு மற்றும் தொண்டை பரிசோதனை, நீரிழிவு, ரத்த அழுத்தம், வாய் புற்றுநோய், காச நோய் பரிசோதனை, தாய் மற்றும் குழந்தை நலம், மக்கள் நலப்பதிவு, தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படவுள்ளன", இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து, தொண்டாமுத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் கனகராணி கூறுகையில், "தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள மக்களுக்கு, 21ம் தேதி காலை, 8 மணி முதல் மாலை 4 மணி வரை சுகாதார திருவிழா நடைபெறவுள்ளது. இம்முகாமில், நோய் கண்டறிதல், மருந்து வழங்குதல், ஆலோசனை வழங்கப்படும்.
பல் பரிசோதனை, கண் பரிசோதனை, காது, மூக்கு மற்றும் தொண்டை பரிசோதனை, நீரிழிவு, ரத்த அழுத்தம், வாய் புற்றுநோய், காச நோய் பரிசோதனை, தாய் மற்றும் குழந்தை நலம், மக்கள் நலப்பதிவு, தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படவுள்ளன", இவ்வாறு அவர் கூறியுள்ளார்.