தமிழக ஆளுநர் மாளிகையை ஆர்.எஸ்.எஸ் கூடாரமாக ஆளுநர் மாற்றி வருகிறார் - கோவையில் திராவிட பண்பாட்டு கூட்டியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிட தமிழர் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, திராவிட மக்கள் இயக்கம், தமிழ் புலிகள் ஆகிய கட்சியினர் பங்கேற்றனர்.


கோவை: "மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வு நடத்தக் கூடாது, நாட்டில் சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழியை கட்டாயப்படுத்தக் கூடாது, தமிழக ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்", ஆகிய மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திராவிட பண்பாட்டு கூட்டியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.



இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிட தமிழர் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, திராவிட மக்கள் இயக்கம், தமிழ் புலிகள் உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இந்நிகழ்வில், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், வழக்கறிஞர் வெண்மணி உட்பட பல அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள், பொது செயலாளர்கள் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினர்.



இதில், ஆளுநர் மாளிகையை ஆர்.எஸ்.எஸ் கூடாரமாக தமிழக ஆளுநர் ரவி மாற்றி வருவதாகவும், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும், எனவும் வலியுறுத்தப்பட்டது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...