கோவை மாநகராட்சியில் 10-புதிய திட்டங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் துவங்க உத்தரவு..!

மத்திய மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சிக்கு 10-புதிய திட்டங்களுக்காக 16.54 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய 10-திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

அதற்கான பணிகள் துவங்க உள்ள நிலையில் கோவை மாநகராட்சியில் பொறியியல் பிரிவில் பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் கோவை மாநகராட்சிக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இது தற்போது 10 புதிய திட்டங்களுக்காக 16.54 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட உள்ள புதிய திட்டங்கள்:-

* கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ஆடிஸ் வீதியில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் 2.50 கோடி ரூபாய்க்கு அமைக்கப்பட்டுள்ளது.

* பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கழிப்பறை கட்டுவதற்கு ரூபாய் 25 லட்சம்.

* மேலும் சிறுநீர் கழிப்பிடம் கட்டுவதற்கு 12 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

* பெரிய கடை வீதி, ராஜ வீதி, கிராஸ்கட் ரோடு இந்த இடங்களில் போக்குவரத்திற்கான பிரதான சாலை அமைப்பதற்கு 7.48 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* உக்கடம் பெரியகுளத்தில் படகு சவாரிக்கு ஒரு கோடி ரூபாய், நீர்நிலை காணொளி திட்டத்திற்கு 3 கோடி ரூபாய் என செலவிடப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளுக்கான டெண்டர் கோரப்பட்டு ஒப்பந்ததாரர்கள் முடிவு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட உள்ளது. இத்திட்டப் பணிகளை தொடர்ந்து கண்காணித்து செயல்படுத்த பொறியியல் துறையில் பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய மண்டல பிரிவுக்கு உதவி நிர்வாக பொறியாளர் புவனேஸ்வரி, தெற்கு மண்டல பகுதிகளுக்கு கருப்புசாமி ஆகியோர் பொறுப்பு அதிகாரிகளாக கோவை மாநகராட்சி ஆணையரால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...