கோவை மாநகராட்சியில் 10-புதிய திட்டங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் துவங்க உத்தரவு..!

மத்திய மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சிக்கு 10-புதிய திட்டங்களுக்காக 16.54 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய 10-திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

அதற்கான பணிகள் துவங்க உள்ள நிலையில் கோவை மாநகராட்சியில் பொறியியல் பிரிவில் பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் கோவை மாநகராட்சிக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இது தற்போது 10 புதிய திட்டங்களுக்காக 16.54 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட உள்ள புதிய திட்டங்கள்:-

* கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ஆடிஸ் வீதியில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் 2.50 கோடி ரூபாய்க்கு அமைக்கப்பட்டுள்ளது.

* பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கழிப்பறை கட்டுவதற்கு ரூபாய் 25 லட்சம்.

* மேலும் சிறுநீர் கழிப்பிடம் கட்டுவதற்கு 12 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

* பெரிய கடை வீதி, ராஜ வீதி, கிராஸ்கட் ரோடு இந்த இடங்களில் போக்குவரத்திற்கான பிரதான சாலை அமைப்பதற்கு 7.48 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* உக்கடம் பெரியகுளத்தில் படகு சவாரிக்கு ஒரு கோடி ரூபாய், நீர்நிலை காணொளி திட்டத்திற்கு 3 கோடி ரூபாய் என செலவிடப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளுக்கான டெண்டர் கோரப்பட்டு ஒப்பந்ததாரர்கள் முடிவு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட உள்ளது. இத்திட்டப் பணிகளை தொடர்ந்து கண்காணித்து செயல்படுத்த பொறியியல் துறையில் பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய மண்டல பிரிவுக்கு உதவி நிர்வாக பொறியாளர் புவனேஸ்வரி, தெற்கு மண்டல பகுதிகளுக்கு கருப்புசாமி ஆகியோர் பொறுப்பு அதிகாரிகளாக கோவை மாநகராட்சி ஆணையரால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...