மக்கள் தொடர்பு முகாம்: மனுக்களை பெற்றுக்கொண்டு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய கோவை மாவட்ட ஆட்சியர்..!

இந்த முகாமில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று பரிசீலனை செய்யப்பட்டு அவர்களுக்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம் வெள்ளைப்பாளையம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.



இந்நிகழ்வில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்வில், பொது மக்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், மக்களை தேடி அரசின் திட்டங்கள் எல்லாம் செல்ல வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்றும் அதன்படியே இன்று மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகிறது என தெரிவித்தார்.

மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்களை இதற்குச் சான்றாக விளங்குகின்றது என்றும், இங்கு நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு முன்பாக இப்பகுதிகளில் ஒரு மாதத்திற்கு முன்னரே இப்பகுதி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று உரிய மனுக்களை தீர்வு காணப்பட்டுள்ளது எனவும், அதற்கான நலத்திட்டங்களும் இந்த முகாம்களில் வழங்கப்படுகின்றது என தெரிவித்தார்.

மக்கள் தொடர்பு முகாம் என்பது ஒரு நாள் நடப்பது அல்ல என்றும் ஒரு மாதமாக பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று பரிசீலனை செய்யப்பட்டு அவர்களுக்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், அதன்படி பெறப்பட்ட மனுக்களில் 575 பயனாளிகளுக்கு 2 கோடியே 23 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றது எனவும் கூறினார்.



பின் காரமடை வட்டம் தோட்டக்கலை மலைப்பயிர் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியைப் பார்வையிட்டார்.



இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், காரமடை நகராட்சித் தலைவர் உஷா ரமேஷ், காரமடை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை, ஒன்றியக் குழு உறுப்பினர் ஜெகதீசன், பெள்ளேபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சுரேந்திரன், வட்டாட்சியர் ரமேஷ், சமூக ஆர்வலர்கள் சண்முகசுந்தரம், கல்யாணசுந்தரம், உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...