அரசு பள்ளியில் மாணவியை மதம் மாற்ற முயன்ற ஆசிரியர்? திருப்பூரில் இந்து இளைஞர் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்..!

தமிழகத்தில் மதமாற்ற தடை சட்டம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு இந்து இளைஞர் முன்னணியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: திருப்பூரில் அரசு பள்ளியில் மாணவியை மதமாற்ற முயற்சி செய்ததாக குற்றம் சாட்டி, குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்து இளைஞர் முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் ராயபுரம் பகுதியில் உள்ள ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வரக்கூடிய சூழ்நிலையில் அப்பள்ளியில் பணிபுரியக்கூடிய தமிழ் ஆசிரியர் ஒருவர் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவியை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயற்சிப்பதாக கூறி நேற்றைய தினம் வடக்கு காவல் நிலையத்தில் இந்து முன்னணி சார்பில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் மத மாற்ற முயன்ற பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு இந்து இளைஞர் முன்னணியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...