தமிழகத்தில் மதமாற்ற தடை சட்டம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு இந்து இளைஞர் முன்னணியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: திருப்பூரில் அரசு பள்ளியில் மாணவியை மதமாற்ற முயற்சி செய்ததாக குற்றம் சாட்டி, குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்து இளைஞர் முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் ராயபுரம் பகுதியில் உள்ள ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வரக்கூடிய சூழ்நிலையில் அப்பள்ளியில் பணிபுரியக்கூடிய தமிழ் ஆசிரியர் ஒருவர் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவியை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயற்சிப்பதாக கூறி நேற்றைய தினம் வடக்கு காவல் நிலையத்தில் இந்து முன்னணி சார்பில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் மத மாற்ற முயன்ற பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு இந்து இளைஞர் முன்னணியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.