'நான் முதல்வன் நேரலை நிகழ்ச்சி': மாணவர்களுடன் கலந்துரையாடிய கோவை மாவட்ட ஆட்சியர்..!

மாணவிகளுடன் கலந்துரையாடிய ஆட்சியர் பள்ளிப்படிப்பை முடித்த பின்பு கல்லூரி படிப்பு எப்படி இருக்கும் எவ்வாறு கல்லூரி படிப்பை தேர்ந்தெடுக்க வேண்டும், வருகின்ற தேர்வுகளை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து கலந்துரையாடினார்.


கோவை: அரசு பள்ளி மாணவ-மாணவியர்களுக்காக "நான் முதல்வன்" என்ற திட்டம் 23-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

இதில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவியினர் அடுத்தக்கட்ட கல்லூரி படிப்பு எவ்வாறு இருக்கும் என்பது குறித்து நேரலை மூலம் கல்வி வல்லுநர்கள் ஆலோசனை வழங்குவர்.



இதில் உயர்கல்வி, நுழைவுத்தேர்வு, உதவித்தொகை குறித்து ஆலோசனைகள் வழங்கப்படும். அதன் ஒரு பகுதியாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் கல்வி வல்லுநர்கள் ஆன்லைன் நேரலை மூலம் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு உயர்கல்வி குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா ஆகியோரும் கலந்து கொண்டனர்.



பின்னர் மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட ஆட்சியர் பள்ளிப்படிப்பை முடித்த பின்பு கல்லூரி படிப்பு எப்படி இருக்கும் எவ்வாறு கல்லூரி படிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும் வருகின்ற தேர்வுகளை எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும் என்பது குறித்து கலந்துரையாடினார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...