இரிடியம் உள்ளதாக கூறி கோவை தனியார் விடுதியில் தங்கியிருந்த முதியவரிடம் ரூ.30-லட்சம் மோசடி செய்த நபர்களால் பரபரப்பு..!

கோவை தனியார் விடுதியில் தங்கியிருந்த முதியவரிடம் இரிடியம் உள்ளதாக கூறி ரூ.30-லட்சம் மோசடி செய்த 4-பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை தனியார் விடுதியில் தங்கியிருந்த முதியவரிடம் ரூ.30-லட்சம் மோசடி செய்த 4-பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை சேர்ந்த மனோகரன் (60). இவர் கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறையெடுத்து தங்கியுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு அந்த விடுதிக்கு வந்த மர்ம நபர்கள், மனோகரன் வைத்திருந்த ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மனோகரனிடம், விசாரணை மேற்கொண்டனர்.

முதல் கட்ட விசாரணையில் மனோகரனிடம் பேசிய மர்ம நபர்கள் தன்னிடம் இரிடியம் உள்ளதாகக் கூறி பணத்துடன் கோவை வர சொன்னதாகவும், இதை நம்பி வந்த அவரிடம் இரண்டு மர்ம நபர்கள் ஒரு பெட்டியை கொடுத்துவிட்டு அதை 4-மணி நேரம் கழித்து திறந்து பார்த்தால் இரிடியத்திற்கு சத்தி கிடைக்கும் என கூறி விட்டு பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.

இதையடுத்து, 4-மணி நேரம் கழித்து பெட்டியை திறந்து பார்த்த போது அதில் செங்கள் கட்டிகள் இருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, மனோகரன் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் முருகானந்தம், கண்ணப்பன் உள்ளிட்ட 4-பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...