இரிடியம் உள்ளதாக கூறி கோவை தனியார் விடுதியில் தங்கியிருந்த முதியவரிடம் ரூ.30-லட்சம் மோசடி செய்த நபர்களால் பரபரப்பு..!

கோவை தனியார் விடுதியில் தங்கியிருந்த முதியவரிடம் இரிடியம் உள்ளதாக கூறி ரூ.30-லட்சம் மோசடி செய்த 4-பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை தனியார் விடுதியில் தங்கியிருந்த முதியவரிடம் ரூ.30-லட்சம் மோசடி செய்த 4-பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை சேர்ந்த மனோகரன் (60). இவர் கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறையெடுத்து தங்கியுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு அந்த விடுதிக்கு வந்த மர்ம நபர்கள், மனோகரன் வைத்திருந்த ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மனோகரனிடம், விசாரணை மேற்கொண்டனர்.

முதல் கட்ட விசாரணையில் மனோகரனிடம் பேசிய மர்ம நபர்கள் தன்னிடம் இரிடியம் உள்ளதாகக் கூறி பணத்துடன் கோவை வர சொன்னதாகவும், இதை நம்பி வந்த அவரிடம் இரண்டு மர்ம நபர்கள் ஒரு பெட்டியை கொடுத்துவிட்டு அதை 4-மணி நேரம் கழித்து திறந்து பார்த்தால் இரிடியத்திற்கு சத்தி கிடைக்கும் என கூறி விட்டு பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.

இதையடுத்து, 4-மணி நேரம் கழித்து பெட்டியை திறந்து பார்த்த போது அதில் செங்கள் கட்டிகள் இருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, மனோகரன் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் முருகானந்தம், கண்ணப்பன் உள்ளிட்ட 4-பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...