கோவையில் தனியார் விடுதியில் தங்கியிருந்த நபரிடம் போலீஸ் என்று கூறி ரூ.35 லட்ச பணத்தை மோசடி செய்த மர்ம நபர்கள்..!

கோவையில் தனியார் விடுதியில் தங்கியிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நபரிடம் போலீஸ் என்று கூறி மர்ம நபர்கள் ரூ.35 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.


கோவை: கோவையில் தனியார் விடுதியில் தங்கியிருந்த நபரிடம் போலீஸ் என்று கூறி மர்ம நபர்கள் ரூ.35 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் பெரும்.பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் மனோகரன். இவர் நேற்று இரவு கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறையெடுத்து தங்கியுள்ளார். அப்போது, நள்ளிரவில் தங்கும் விடுதிக்கு வந்த மர்ம நபர்கள், தாங்கள் காவல்துறையினர் எனக் கூறி அறையை சோதனை போட்டதாக தெரிகிறது.

அப்போது, மனோகரன் வைத்திருந்த ரூ 35 லட்சத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மனோகரனிடம், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், தங்கும் விடுதியில் போலீசார் என்று கூறி ரூ.35 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...