கோவை பாலக்காடு நெடுஞ்சாலை அருகே கே ஜி சாவடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது 2.5 கிலோ கஞ்சாவை வைத்திருந்த ராஜன் என்ற நபரை பிடித்தனர்.
கோவை: கோவை திருமலையாம்பாளையம் அருகே வடமாநில தொழிலாளர்களை குறிவைத்து கஞ்சா விற்க முயன்ற நபரை கே.ஜி.சாவடி போலீசார் கைது செய்தனர்.
கோவை பாலக்காடு நெடுஞ்சாலை திருமலையாம்பாளையம் பிரிவு அருகே கே ஜி சாவடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வடமாநில தொழிலாளி ஒருவரை பிடித்து விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இதையடுத்து, போலீசார் சோதனை செய்தபோது அவர் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம், மேற்கொண்ட விசாரணையில் பிடிபட்ட நபர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராஜன் (43) என்பதும், அவர் கிணத்துக்கடவு பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
மேலும், அவர் கஞ்சாவை வாங்கி வடமாநிலத் தொழிலாளர்களை குறிவைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, ராஜனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 2.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை பாலக்காடு நெடுஞ்சாலை திருமலையாம்பாளையம் பிரிவு அருகே கே ஜி சாவடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வடமாநில தொழிலாளி ஒருவரை பிடித்து விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இதையடுத்து, போலீசார் சோதனை செய்தபோது அவர் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம், மேற்கொண்ட விசாரணையில் பிடிபட்ட நபர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராஜன் (43) என்பதும், அவர் கிணத்துக்கடவு பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
மேலும், அவர் கஞ்சாவை வாங்கி வடமாநிலத் தொழிலாளர்களை குறிவைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, ராஜனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 2.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.