கோவையில் வடமாநில தொழிலாளிகளை குறிவைத்து கஞ்சா விற்க முயன்ற நபர் கைது….!

கோவை பாலக்காடு நெடுஞ்சாலை அருகே கே ஜி சாவடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது 2.5 கிலோ கஞ்சாவை வைத்திருந்த ராஜன் என்ற நபரை பிடித்தனர்.


கோவை: கோவை திருமலையாம்பாளையம் அருகே வடமாநில தொழிலாளர்களை குறிவைத்து கஞ்சா விற்க முயன்ற நபரை கே.ஜி.சாவடி போலீசார் கைது செய்தனர்.

கோவை பாலக்காடு நெடுஞ்சாலை திருமலையாம்பாளையம் பிரிவு அருகே கே ஜி சாவடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வடமாநில தொழிலாளி ஒருவரை பிடித்து விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

இதையடுத்து, போலீசார் சோதனை செய்தபோது அவர் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம், மேற்கொண்ட விசாரணையில் பிடிபட்ட நபர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராஜன் (43) என்பதும், அவர் கிணத்துக்கடவு பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

மேலும், அவர் கஞ்சாவை வாங்கி வடமாநிலத் தொழிலாளர்களை குறிவைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, ராஜனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 2.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...