'இந்தியை திணிக்காதே..!' - கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

இந்தி மொழிக்கு எதிராக மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தியும், பாஜக அரசை கண்டித்தும், கோவை காந்திபார்க் பகுதியில் சி.பி.எம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை: இந்தி மொழிக்கு எதிராக மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தியும், பாஜக அரசை கண்டித்தும், கோவை காந்திபார்க் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



மொழி குறித்து அரசியல் சாசனத்தின் 8 வது அட்டவணையை சீர் குலைக்க கூடாது, மக்களின் உணர்வுகளுக்கு எதிராக இந்தியை திணிக்க கூடாது, மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவு தேர்வு நடத்துகின்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிபிஎம் மேற்கு நகர குழு செயலாளர் பி.சி.முருகன் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில், கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் சி.பத்மநாபன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

இதில் உரையாற்றிய பத்மநாபன் பேசுகையில், "பல்கலைக்கழகங்களில் நுழைவு தேர்வு உத்தரவை திரும்ப பெற வேண்டும் என தெரிவித்தார். மேலும் இந்தியாவில் எந்த மொழியும் இன்னொரு மொழிக்கு குறைந்தது அல்ல", எனவும் தெரிவித்தார்.



ஆர்பாட்டத்தில், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...