கோவை அஜ்ஜனூர் பிரிவு அருகில் காரில் வைத்து கஞ்சா விற்பனை - பத்திரிக்கையாளர் அடையாள அட்டையுடன் சுற்றிய இருவர் கைது!

கோவை வடவள்ளி - தொண்டாமுத்தூர் சாலை அஜ்ஜனூர் பிரிவு அருகே காரில் வைத்து கஞ்சா விற்பனை செய்த இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 2.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை வடவள்ளி - தொண்டாமுத்தூர் சாலை அஜ்ஜனூர் பிரிவு அருகே வடவள்ளி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டி வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர்.

அப்போது, காரை சோதனை போது, காரில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில், பிடிபட்ட நபர்கள் பி.என்.புதூரை சேர்ந்த சரவணன் (38) மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த சூர்யா (22) என்பது தெரியவந்தது.



மேலும், பிடிபட்ட சரவணன் ஓட்டுநர் வேலை பார்த்து வருவதாகவும், ஆனால், காரில் பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டி வைத்ததுடன், ஆரம்பம் மலர் என்ற வார பத்திரிக்கையின் உதவி ஆசிரியர் என அடையாள அட்டையை வைத்திருந்ததும், தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 2.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...