கோவை வடவள்ளி - தொண்டாமுத்தூர் சாலை அஜ்ஜனூர் பிரிவு அருகே காரில் வைத்து கஞ்சா விற்பனை செய்த இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 2.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவை வடவள்ளி - தொண்டாமுத்தூர் சாலை அஜ்ஜனூர் பிரிவு அருகே வடவள்ளி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டி வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர்.
அப்போது, காரை சோதனை போது, காரில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில், பிடிபட்ட நபர்கள் பி.என்.புதூரை சேர்ந்த சரவணன் (38) மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த சூர்யா (22) என்பது தெரியவந்தது.

மேலும், பிடிபட்ட சரவணன் ஓட்டுநர் வேலை பார்த்து வருவதாகவும், ஆனால், காரில் பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டி வைத்ததுடன், ஆரம்பம் மலர் என்ற வார பத்திரிக்கையின் உதவி ஆசிரியர் என அடையாள அட்டையை வைத்திருந்ததும், தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 2.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அப்போது, காரை சோதனை போது, காரில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில், பிடிபட்ட நபர்கள் பி.என்.புதூரை சேர்ந்த சரவணன் (38) மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த சூர்யா (22) என்பது தெரியவந்தது.
மேலும், பிடிபட்ட சரவணன் ஓட்டுநர் வேலை பார்த்து வருவதாகவும், ஆனால், காரில் பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டி வைத்ததுடன், ஆரம்பம் மலர் என்ற வார பத்திரிக்கையின் உதவி ஆசிரியர் என அடையாள அட்டையை வைத்திருந்ததும், தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 2.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.