கோவை மாநகராட்சியில் 2016-யில் கொண்டுவரப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இன்று வரை ரூபாய் 719.22-கோடி செலவிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
கோவை: கோவை மாநகராட்சிக்கான மாமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ள நிலையில், கணக்குக்குழு தலைவராக கோவை மாநகராட்சியின் 59-வது வார்டு மாமன்ற உறுப்பினர் தீபா தளபதி இளங்கோ, பொறுப்பேற்றுள்ளார்.
கோவை மாநகராட்சி மாமன்றத்தில் கணக்கு குழு கூட்டம் நடைபெற்றதைத் தொடர்ந்து, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகள் தொடர்பாகவும், செலவினங்கள் தொடர்பாகவும் தீபா தளபதி இளங்கோ கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணிபுரியும் அதிகாரிகள் பதில் அளித்தது என்னவென்று கோவை மாநகராட்சி மாமன்றத்தின் கணக்கு குழு தலைவராக உள்ள தீபா தளபதி இளங்கோ கூறியதாவது;
ஸ்மார்ட் சிட்டி திட்டமானது கடந்த 2016 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. மத்திய அரசின் நிதியாக ரூபாய் 490 கோடியும், மாநில அரசு நிதியாக 500 கோடியாகவும் வழங்கியுள்ளது.
தற்போது நிலைப்பாட்டின்படி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 978.73 கோடி ரூபாய்க்கு 56 பணிகள் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், தற்போது 24.05 கோடி ரூபாய் நிதியின் கீழ் 32 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது எனவும், நடைபெற்று வரும் 14 பணிகளுக்கு 478.17 கோடி ரூபாய் செலவிடப்படத் திட்டமிட்டுள்ளதாகவும், மேலும், மேற்கொள்ளவுள்ள புதிய 10 பணிகளுக்கு 16.74 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கு மட்டுமே 150 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது எனவும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, இதுவரை செய்யப்பட்ட செலவினங்களுக்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம் என தெரிவித்தார்.
கோவை மாநகராட்சி ஆணையரிடம் ஆலோசனை மேற்கொண்ட பின்னர் இதற்கான முடிவுகள் தெரிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
கோவை மாநகராட்சி மாமன்றத்தில் கணக்கு குழு கூட்டம் நடைபெற்றதைத் தொடர்ந்து, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகள் தொடர்பாகவும், செலவினங்கள் தொடர்பாகவும் தீபா தளபதி இளங்கோ கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணிபுரியும் அதிகாரிகள் பதில் அளித்தது என்னவென்று கோவை மாநகராட்சி மாமன்றத்தின் கணக்கு குழு தலைவராக உள்ள தீபா தளபதி இளங்கோ கூறியதாவது;
ஸ்மார்ட் சிட்டி திட்டமானது கடந்த 2016 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. மத்திய அரசின் நிதியாக ரூபாய் 490 கோடியும், மாநில அரசு நிதியாக 500 கோடியாகவும் வழங்கியுள்ளது.
தற்போது நிலைப்பாட்டின்படி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 978.73 கோடி ரூபாய்க்கு 56 பணிகள் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், தற்போது 24.05 கோடி ரூபாய் நிதியின் கீழ் 32 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது எனவும், நடைபெற்று வரும் 14 பணிகளுக்கு 478.17 கோடி ரூபாய் செலவிடப்படத் திட்டமிட்டுள்ளதாகவும், மேலும், மேற்கொள்ளவுள்ள புதிய 10 பணிகளுக்கு 16.74 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கு மட்டுமே 150 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது எனவும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, இதுவரை செய்யப்பட்ட செலவினங்களுக்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம் என தெரிவித்தார்.
கோவை மாநகராட்சி ஆணையரிடம் ஆலோசனை மேற்கொண்ட பின்னர் இதற்கான முடிவுகள் தெரிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.