‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம்: ரூ.719.22-கோடி செலவு - மாநகராட்சி கணக்கு குழு கூட்டத்தில் தகவல்..!

கோவை மாநகராட்சியில் 2016-யில் கொண்டுவரப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இன்று வரை ரூபாய் 719.22-கோடி செலவிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.


கோவை: கோவை மாநகராட்சிக்கான மாமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ள நிலையில், கணக்குக்குழு தலைவராக கோவை மாநகராட்சியின் 59-வது வார்டு மாமன்ற உறுப்பினர் தீபா தளபதி இளங்கோ, பொறுப்பேற்றுள்ளார்.

கோவை மாநகராட்சி மாமன்றத்தில் கணக்கு குழு கூட்டம் நடைபெற்றதைத் தொடர்ந்து, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகள் தொடர்பாகவும், செலவினங்கள் தொடர்பாகவும் தீபா தளபதி இளங்கோ கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணிபுரியும் அதிகாரிகள் பதில் அளித்தது என்னவென்று கோவை மாநகராட்சி மாமன்றத்தின் கணக்கு குழு தலைவராக உள்ள தீபா தளபதி இளங்கோ கூறியதாவது;

ஸ்மார்ட் சிட்டி திட்டமானது கடந்த 2016 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. மத்திய அரசின் நிதியாக ரூபாய் 490 கோடியும், மாநில அரசு நிதியாக 500 கோடியாகவும் வழங்கியுள்ளது.

தற்போது நிலைப்பாட்டின்படி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 978.73 கோடி ரூபாய்க்கு 56 பணிகள் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், தற்போது 24.05 கோடி ரூபாய் நிதியின் கீழ் 32 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது எனவும், நடைபெற்று வரும் 14 பணிகளுக்கு 478.17 கோடி ரூபாய் செலவிடப்படத் திட்டமிட்டுள்ளதாகவும், மேலும், மேற்கொள்ளவுள்ள புதிய 10 பணிகளுக்கு 16.74 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கு மட்டுமே 150 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது எனவும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, இதுவரை செய்யப்பட்ட செலவினங்களுக்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம் என தெரிவித்தார்.

கோவை மாநகராட்சி ஆணையரிடம் ஆலோசனை மேற்கொண்ட பின்னர் இதற்கான முடிவுகள் தெரிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...