ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்.26-ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு..!

காலக்கெடுவை நீட்டிக்க கோரிக்கைகள் வந்ததையடுத்து, ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்.26-ம் தேதி வரை அவகாசம் நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.


கோவை: ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம், வரும், 26-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

ஆசிரியர் பயிற்சி படிப்பில், பி.எட்., பட்டம் முடித்தவர்கள், ஒன்றாம் வகுப்பு முதல், 10-ம் வகுப்பு வரை ஆசிரியர்களாக பணியாற்ற, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்நிலையில்,

புதிதாக பி.எட்., முடித்தவர்கள் மற்றும் இதுவரை தேர்ச்சி பெறாதவர்கள், தகுதி தேர்வு எழுதும் வகையில், தேர்வு அறிவிப்பை, மார்ச், 7ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, மார்ச் 14-ல் துவங்கி, ஏப்., 13-ல் முடிந்தது. இதில், 4.50 லட்சம் பேர் வரை விண்ணப்பித்திருந்தனர். கடைசி நேரத்தில் ஏராளமானோர் விண்ணப்பிக்க முயன்றதால், 'சர்வர்' முடங்கியது.அதனால், ஏராளமானோர் ஏமாற்றம் அடைந்தனர். எனவே, விண்ணப்பிக்க போதிய அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்; ஆனால், நீட்டிக்கப்படவில்லை.

தேர்வுக்கான பாடத்திட்ட விபரங்கள் மட்டும், வாரியத்தின், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், நான்கு நாட்களுக்குப் பின், தேர்வுக்கு விண்ணப்பிக்க, அவகாசம் நீட்டிக்கப்பட்டு, நேற்று முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது. வரும், 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா அறிவித்துள்ளார்

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...