காலக்கெடுவை நீட்டிக்க கோரிக்கைகள் வந்ததையடுத்து, ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்.26-ம் தேதி வரை அவகாசம் நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
கோவை: ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம், வரும், 26-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
ஆசிரியர் பயிற்சி படிப்பில், பி.எட்., பட்டம் முடித்தவர்கள், ஒன்றாம் வகுப்பு முதல், 10-ம் வகுப்பு வரை ஆசிரியர்களாக பணியாற்ற, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்நிலையில்,
புதிதாக பி.எட்., முடித்தவர்கள் மற்றும் இதுவரை தேர்ச்சி பெறாதவர்கள், தகுதி தேர்வு எழுதும் வகையில், தேர்வு அறிவிப்பை, மார்ச், 7ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.
இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, மார்ச் 14-ல் துவங்கி, ஏப்., 13-ல் முடிந்தது. இதில், 4.50 லட்சம் பேர் வரை விண்ணப்பித்திருந்தனர். கடைசி நேரத்தில் ஏராளமானோர் விண்ணப்பிக்க முயன்றதால், 'சர்வர்' முடங்கியது.அதனால், ஏராளமானோர் ஏமாற்றம் அடைந்தனர். எனவே, விண்ணப்பிக்க போதிய அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்; ஆனால், நீட்டிக்கப்படவில்லை.
தேர்வுக்கான பாடத்திட்ட விபரங்கள் மட்டும், வாரியத்தின், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
இந்நிலையில், நான்கு நாட்களுக்குப் பின், தேர்வுக்கு விண்ணப்பிக்க, அவகாசம் நீட்டிக்கப்பட்டு, நேற்று முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது. வரும், 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா அறிவித்துள்ளார்
ஆசிரியர் பயிற்சி படிப்பில், பி.எட்., பட்டம் முடித்தவர்கள், ஒன்றாம் வகுப்பு முதல், 10-ம் வகுப்பு வரை ஆசிரியர்களாக பணியாற்ற, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்நிலையில்,
புதிதாக பி.எட்., முடித்தவர்கள் மற்றும் இதுவரை தேர்ச்சி பெறாதவர்கள், தகுதி தேர்வு எழுதும் வகையில், தேர்வு அறிவிப்பை, மார்ச், 7ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.
இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, மார்ச் 14-ல் துவங்கி, ஏப்., 13-ல் முடிந்தது. இதில், 4.50 லட்சம் பேர் வரை விண்ணப்பித்திருந்தனர். கடைசி நேரத்தில் ஏராளமானோர் விண்ணப்பிக்க முயன்றதால், 'சர்வர்' முடங்கியது.அதனால், ஏராளமானோர் ஏமாற்றம் அடைந்தனர். எனவே, விண்ணப்பிக்க போதிய அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்; ஆனால், நீட்டிக்கப்படவில்லை.
தேர்வுக்கான பாடத்திட்ட விபரங்கள் மட்டும், வாரியத்தின், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
இந்நிலையில், நான்கு நாட்களுக்குப் பின், தேர்வுக்கு விண்ணப்பிக்க, அவகாசம் நீட்டிக்கப்பட்டு, நேற்று முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது. வரும், 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா அறிவித்துள்ளார்