2 ஆண்டுகளுக்கு பின் கோவை விமான நிலையத்தில் தினமும் 22 விமானங்கள் இயக்கம்!

கொரோனா நோய் தொற்று குறைந்துள்ளதால், கோவை விமான நிலையத்தில் தினந்தோறும் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை தற்போது 22 ஆக அதிகரித்துள்ளது.


கோவை: கோவை விமான நிலையம் மூலம் கோவை உள்பட சுற்றுப்புற 7 மாவட்ட மக்கள் பயனடைந்து வருகின்றனர். ஆண்டுதோறும், 30 லட்சம் பேர் கோவை விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கொரோனா நோய்த் தொற்று காரணமாக, உலகம் முழுவதும் விமான சேவை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது. கோவையை பொறுத்தவரை, தினமும் குறைந்தபட்சம் 33 விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் மே மாதங்களில் தினமும் 5 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன. அந்த அளவுக்கு கொரோனா நோய்த்தொற்று பரவலால் விமான சேவை மோசமடைந்தது.

தற்போது, கடந்த சில மாதங்களாக கொரோனா நோய் தொற்று வெகுவாக குறைந்ததையடுத்து, விமான சேவை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.இந்த சூழலில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, கோவை விமான நிலையத்தில் தினமும் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது, கோவை விமான நிலையத்தில், ரன்வே சீரமைப்பு பணி நடைபெற்று வருவதால், இரவு 10 மணி முதல் அதிகாலை 3 மணி வரை விமானங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதிகாலை 3 மணி முதல் இரவு 10 மணிக்குள் தினமும் 22 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

சர்வதேச போக்குவரத்து பிரிவில் ஷார்ஜா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு மற்றும் உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் மும்பை, சென்னை, பெங்களூரு, டெல்லி, புனே, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு கிவையில் இருந்து விமான சேவை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, கோவை விமான நிலையத்தில் தினமும் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...