கொரோனா நோய் தொற்று குறைந்துள்ளதால், கோவை விமான நிலையத்தில் தினந்தோறும் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை தற்போது 22 ஆக அதிகரித்துள்ளது.
கோவை: கோவை விமான நிலையம் மூலம் கோவை உள்பட சுற்றுப்புற 7 மாவட்ட மக்கள் பயனடைந்து வருகின்றனர். ஆண்டுதோறும், 30 லட்சம் பேர் கோவை விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கொரோனா நோய்த் தொற்று காரணமாக, உலகம் முழுவதும் விமான சேவை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது. கோவையை பொறுத்தவரை, தினமும் குறைந்தபட்சம் 33 விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் மே மாதங்களில் தினமும் 5 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன. அந்த அளவுக்கு கொரோனா நோய்த்தொற்று பரவலால் விமான சேவை மோசமடைந்தது.
தற்போது, கடந்த சில மாதங்களாக கொரோனா நோய் தொற்று வெகுவாக குறைந்ததையடுத்து, விமான சேவை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.இந்த சூழலில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, கோவை விமான நிலையத்தில் தினமும் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது, கோவை விமான நிலையத்தில், ரன்வே சீரமைப்பு பணி நடைபெற்று வருவதால், இரவு 10 மணி முதல் அதிகாலை 3 மணி வரை விமானங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதிகாலை 3 மணி முதல் இரவு 10 மணிக்குள் தினமும் 22 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
சர்வதேச போக்குவரத்து பிரிவில் ஷார்ஜா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு மற்றும் உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் மும்பை, சென்னை, பெங்களூரு, டெல்லி, புனே, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு கிவையில் இருந்து விமான சேவை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, கோவை விமான நிலையத்தில் தினமும் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், கொரோனா நோய்த் தொற்று காரணமாக, உலகம் முழுவதும் விமான சேவை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது. கோவையை பொறுத்தவரை, தினமும் குறைந்தபட்சம் 33 விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் மே மாதங்களில் தினமும் 5 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன. அந்த அளவுக்கு கொரோனா நோய்த்தொற்று பரவலால் விமான சேவை மோசமடைந்தது.
தற்போது, கடந்த சில மாதங்களாக கொரோனா நோய் தொற்று வெகுவாக குறைந்ததையடுத்து, விமான சேவை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.இந்த சூழலில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, கோவை விமான நிலையத்தில் தினமும் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது, கோவை விமான நிலையத்தில், ரன்வே சீரமைப்பு பணி நடைபெற்று வருவதால், இரவு 10 மணி முதல் அதிகாலை 3 மணி வரை விமானங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதிகாலை 3 மணி முதல் இரவு 10 மணிக்குள் தினமும் 22 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
சர்வதேச போக்குவரத்து பிரிவில் ஷார்ஜா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு மற்றும் உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் மும்பை, சென்னை, பெங்களூரு, டெல்லி, புனே, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு கிவையில் இருந்து விமான சேவை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, கோவை விமான நிலையத்தில் தினமும் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.