கோவை சேரன் மாநகரில் கழிப்பறை வசதியுடன் கூடிய புதிய கட்டிடத்தில் நியாய விலைக்கடை விரைவில் திறப்பு!

சேரன் மாநகர் பகுதி மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், 18 லட்சம் ரூபாய் மதிப்பில் நியாய விலைக்கடை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நிறைவடைந்து, தற்போது திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது.


கோவை: கோவை விளாங்குறிச்சி ரோட்டில் அமைந்துள்ளது சேரன் மாநகர் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குடியிருப்பு பகுதி. இங்கு ஏ,பி,சி என மூன்று பிரிவுகளின் கீழ் 568 தனி வீடுகள் அமைந்துள்ளன.

இந்த நிலையில், சேரன் மாநகர் பகுதியில் வசிக்கும் மக்கள் தற்போது இரண்டாவது பஸ் ஸ்டாப் அருகே சிறிய கட்டிடத்தில் இயங்கி வரும் நியாய விலைக் கடையில் தான் தங்களுக்கு தேவையான பொருட்களை மாதந்தோறும் பெற்று வருகின்றனர்.

இடவசதி மற்றும் பாதுகாப்பு குறைபாடு காரணமாக, புதிய கட்டிடத்தில் ரேஷன் கடை அமைக்க வேண்டும், என மக்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில், முதல் பஸ் ஸ்டாப் அருகே 18 லட்சம் ரூபாய் மதிப்பில் நியாய விலைக்கடை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நிறைவடைந்து, தற்போது திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது.



இது குறித்து பேசிய கோவை மாநகராட்சி 22வது வார்டு கவுன்சிலர் கோவை பாபு: நியாய விலைக்கடைக்கு கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளன. விரைவில் அமைச்சர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது.

இந்த நியாய விலைக்கடையில் அதிக இடவசதி மற்றும் கழிப்பறை வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, புதிய கட்டிடத்தில் செயல்பட உள்ள நியாய விலைக்கடை வளாகம், பொருட்கள் வாங்க வரும் மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...