இந்த 'சாதி சான்றிதழ்' வேண்டாங்க... நகலை கிழித்து எறிந்து கோவையில் தமிழ்நாடு வண்ணார் பேரவை போராட்டம்..!

வண்ணார் சமுதாயத்திற்கு மட்டும் சலவை தொழிலாளி என்ற தொழிலை மையப்படுத்தி "இந்து வண்ணார் சலவை தொழிலாளி" என்ற சாதி சான்றிதழை வழங்குவதாகவும், அதனை "இந்து வண்ணார்" என மாற்றக் கோரியும் இந்த போராட்டமானது மேற்கொள்ளப்பட்டது.


கோவை: வண்ணார் என்ற சாதிசான்றிதழை மட்டும் வழங்கிட வலியுறுத்தி சாதிச் சான்றிதழை கிழித்தெறியும் போராட்டத்தை மேற்கொண்ட தமிழ்நாடு வண்ணார் பேரவையினர்.



கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு வண்ணார் பேரவை அமைப்பினர் சார்பில் தமிழக வாழ்வுரிமை பாதுகாப்பு மக்கள் கட்சியினர் சாதி சான்றிதழை கிழித்தெறியும் போராட்டத்தை மேற்கொண்டனர்.

வண்ணார் சமுதாயத்திற்கு மட்டும் சலவை தொழிலாளி என்ற தொழிலை மையப்படுத்தி "இந்து வண்ணார் சலவை தொழிலாளி" என்ற சாதி சான்றிதழைவழங்குவதாகவும்,அதனை "இந்து வண்ணார்" என மாற்றக் கோரியும் இந்த போராட்டமானது மேற்கொள்ளப்பட்டது.



தமிழ்நாடு வண்ணார் பேரவையின் தலைவர் மணி பாபா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

போராட்டத்தில் சிறப்புரையாற்றிய அவர், பிற சாதியினர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கும் போது அவர்கள் சாதி பெயரை மட்டும் குறிப்பிடுகின்றனர் எனவும் ஆனால் வண்ணார் சாதியினருக்கு மட்டும் அவர்களது தொழில் பெயரைக் குறிப்பிடுவது ஏற்புடையது அல்ல எனவும், தற்பொழுது இந்த சாதியினரில் பலரும் நன்கு படித்து பல்வேறு உயர் பதவிகளில் இருக்கும் பொழுது இவ்வாறு அவர்களது தொழிலை குறிப்பிடுவது முறையாக இருக்காது என தெரிவித்தார். எனவே தமிழக அரசு உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுத்து அவர்களது தொழில் பெயரை சாதி சான்றிதழில் குறிப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என தெரிவித்தார்.



இந்த போராட்டத்தில் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டு அவர்களது சாதி சான்றிதழ் நகல்கள் கிழித்தெறியப்பட்டன. அதனைத் தொடர்ந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். சாலை மறியலால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...