கோவையில் டெங்கு ஒழிப்பு..! வீடு வீடாக சென்று தொட்டிகளில் அபேட் மருந்து ஊற்றி வரும் மாநகராட்சி பணியாளர்கள்

கோவை மாநகராட்சியில் வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மண்டல பகுதியின் ஒரு சில வார்டுகளில் மாநகராட்சி டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று அபேட் மருந்து ஊற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்-19க்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள், வீடு வீடாகச் சென்று அபேட் மருந்தை தொட்டிகளில் ஊற்றுவது, தேவையில்லாத பொருட்களை அகற்றுவது, பொதுமக்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரில் கொசுப் புழுக்கள் உள்ளனவா? என்பதை கண்டறியும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.



கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்-76க்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சிறப்பு தூய்மைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.



அதன்படி, மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்- 48க்கு உட்பட்ட தனலட்சுமி நகர், சித்தாபுதூர் ஆகிய பகுதிகளில் மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், மக்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் தேவையில்லாமல் தேங்கியுள்ள தண்ணீரை அப்புறப்படுத்தவும், தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தவும், பணியாளர்கள் அறிவுறுத்தினர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...