கோவை மாநகராட்சியில் வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மண்டல பகுதியின் ஒரு சில வார்டுகளில் மாநகராட்சி டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று அபேட் மருந்து ஊற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்-19க்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள், வீடு வீடாகச் சென்று அபேட் மருந்தை தொட்டிகளில் ஊற்றுவது, தேவையில்லாத பொருட்களை அகற்றுவது, பொதுமக்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரில் கொசுப் புழுக்கள் உள்ளனவா? என்பதை கண்டறியும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்-76க்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சிறப்பு தூய்மைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்- 48க்கு உட்பட்ட தனலட்சுமி நகர், சித்தாபுதூர் ஆகிய பகுதிகளில் மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், மக்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் தேவையில்லாமல் தேங்கியுள்ள தண்ணீரை அப்புறப்படுத்தவும், தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தவும், பணியாளர்கள் அறிவுறுத்தினர்.
கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்-76க்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சிறப்பு தூய்மைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்- 48க்கு உட்பட்ட தனலட்சுமி நகர், சித்தாபுதூர் ஆகிய பகுதிகளில் மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், மக்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் தேவையில்லாமல் தேங்கியுள்ள தண்ணீரை அப்புறப்படுத்தவும், தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தவும், பணியாளர்கள் அறிவுறுத்தினர்.