தற்போது, சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ரன்னிமேடு வரை வார இறுதி நாட்களில் சிறப்பு ரயில்கள் விரைவில் இயக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மலை ரயில், 'யுனெஸ்கோ' பாரம்பரிய அந்தஸ்து பெற்றது. இதில் பயணம் செய்ய சர்வதேச சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுவதால், கோடை சீசனில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
வழக்கமாக, மேட்டுப்பாளையம்-குன்னுார்-ஊட்டி இடையே தலா ஒரு முறையும், ஊட்டி-குன்னுார் இடையே, தலா நான்கு முறையும் மலை ரயில் இயக்கப்படுகிறது. தற்போது, கோடை சீசன் என்பதால் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருவதால், தெற்கு ரெயில்வே சிறப்பு மலை ரயில் இயக்க முடிவு செய்துள்ளது.
நேற்று, மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை வந்த சிறப்பு மலைரயிலில், ரயில்வே வாரிய நிதி உறுப்பினர் நரேஷ் சலோச்சா, சேலம் கோட்ட பொது மேலாளர் கவுதம் சீனிவாசன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அவர்கள் கூறியதாவது: நீலகிரி மலை ரயில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தற்போது, சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ரன்னிமேடு வரை வார இறுதி நாட்களில் சிறப்பு ரயில்கள் விரைவில் இயக்கப்படும்.
மேட்டுப்பாளையம்-குன்னுார் இடையே, 120 நாட்களுக்கு தொடர்ந்து முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக மாற்றப்பட்ட முன்பதிவு ரயில் பட்டியல், 15 நாட்களில் மாற்றம் செய்து, முன்பதிவில்லாமல், இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
வழக்கமாக, மேட்டுப்பாளையம்-குன்னுார்-ஊட்டி இடையே தலா ஒரு முறையும், ஊட்டி-குன்னுார் இடையே, தலா நான்கு முறையும் மலை ரயில் இயக்கப்படுகிறது. தற்போது, கோடை சீசன் என்பதால் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருவதால், தெற்கு ரெயில்வே சிறப்பு மலை ரயில் இயக்க முடிவு செய்துள்ளது.
நேற்று, மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை வந்த சிறப்பு மலைரயிலில், ரயில்வே வாரிய நிதி உறுப்பினர் நரேஷ் சலோச்சா, சேலம் கோட்ட பொது மேலாளர் கவுதம் சீனிவாசன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அவர்கள் கூறியதாவது: நீலகிரி மலை ரயில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தற்போது, சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ரன்னிமேடு வரை வார இறுதி நாட்களில் சிறப்பு ரயில்கள் விரைவில் இயக்கப்படும்.
மேட்டுப்பாளையம்-குன்னுார் இடையே, 120 நாட்களுக்கு தொடர்ந்து முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக மாற்றப்பட்ட முன்பதிவு ரயில் பட்டியல், 15 நாட்களில் மாற்றம் செய்து, முன்பதிவில்லாமல், இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.