நீலகிரி கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: சிறப்பு மலை ரயில் இயக்க முடிவு!

தற்போது, சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ரன்னிமேடு வரை வார இறுதி நாட்களில் சிறப்பு ரயில்கள் விரைவில் இயக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


நீலகிரி மலை ரயில், 'யுனெஸ்கோ' பாரம்பரிய அந்தஸ்து பெற்றது. இதில் பயணம் செய்ய சர்வதேச சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுவதால், கோடை சீசனில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

வழக்கமாக, மேட்டுப்பாளையம்-குன்னுார்-ஊட்டி இடையே தலா ஒரு முறையும், ஊட்டி-குன்னுார் இடையே, தலா நான்கு முறையும் மலை ரயில் இயக்கப்படுகிறது. தற்போது, கோடை சீசன் என்பதால் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருவதால், தெற்கு ரெயில்வே சிறப்பு மலை ரயில் இயக்க முடிவு செய்துள்ளது.

நேற்று, மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை வந்த சிறப்பு மலைரயிலில், ரயில்வே வாரிய நிதி உறுப்பினர் நரேஷ் சலோச்சா, சேலம் கோட்ட பொது மேலாளர் கவுதம் சீனிவாசன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

அவர்கள் கூறியதாவது: நீலகிரி மலை ரயில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தற்போது, சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ரன்னிமேடு வரை வார இறுதி நாட்களில் சிறப்பு ரயில்கள் விரைவில் இயக்கப்படும்.

மேட்டுப்பாளையம்-குன்னுார் இடையே, 120 நாட்களுக்கு தொடர்ந்து முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக மாற்றப்பட்ட முன்பதிவு ரயில் பட்டியல், 15 நாட்களில் மாற்றம் செய்து, முன்பதிவில்லாமல், இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...