மழை பெய்ததால் சேறு மாநகராக காட்சியளிக்கும் சேரன்மாநகர் ரோடு: கோவையில் குளம் போல் தேங்கிய தண்ணீரால் வாகன ஓட்டிகள் அவதி..!

புதிய தார்சாலை அமைத்து முடிக்கும் வரை சேரன்மாநகர் செல்லும் ரோட்டை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமம் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.



கோவை:கோவையில் குளம் போல் தேங்கிய தண்ணீரால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

ஹோப் காலேஜ் முதல் சேரன்மாநகர் வரை செல்லும் சேரன்மாநகர் ரோட்டில் தண்ணீர் பைப் லைன் மற்றும் காஸ் பைப்லைன் பதிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆமை வேகத்தில் மேற்கொண்ட காரணத்தால், கடந்த பல ஆண்டுகளாக ரோடு சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது.

சமீபத்தில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் சிறிது மகிழ்ச்சி அடைந்த நிலையில் இரண்டு நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக ஏற்கனவே மோசமாக காணப்பட்ட ரோடு, மேலும் மோசமடைந்துள்ளது. பல இடங்களில் சேறு மட்டுமே ரோட்டில் அதிகம் காணப்படுகின்றன.



இது தவிரசாலை அமைக்கும் பணிகள் காரணமாக ரோட்டில் சில இடங்களில் தண்ணீர் வடிகால் அடைக்கப்பட்டதால் இன்று பெய்த மழை காரணமாக ரோட்டின் பல்வேறு பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கி நின்றன. மாநகராட்சி ஊழியர்கள் பல மணி நேரம் போராடி தண்ணீரை வெளியேற்றினர்.

புதிய தார்சாலை அமைத்து முடிக்கும் வரை சேரன்மாநகர் செல்லும் ரோட்டை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமம் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...