புதிய தார்சாலை அமைத்து முடிக்கும் வரை சேரன்மாநகர் செல்லும் ரோட்டை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமம் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.
கோவை:கோவையில் குளம் போல் தேங்கிய தண்ணீரால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
ஹோப் காலேஜ் முதல் சேரன்மாநகர் வரை செல்லும் சேரன்மாநகர் ரோட்டில் தண்ணீர் பைப் லைன் மற்றும் காஸ் பைப்லைன் பதிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆமை வேகத்தில் மேற்கொண்ட காரணத்தால், கடந்த பல ஆண்டுகளாக ரோடு சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது.
சமீபத்தில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் சிறிது மகிழ்ச்சி அடைந்த நிலையில் இரண்டு நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக ஏற்கனவே மோசமாக காணப்பட்ட ரோடு, மேலும் மோசமடைந்துள்ளது. பல இடங்களில் சேறு மட்டுமே ரோட்டில் அதிகம் காணப்படுகின்றன.
இது தவிரசாலை அமைக்கும் பணிகள் காரணமாக ரோட்டில் சில இடங்களில் தண்ணீர் வடிகால் அடைக்கப்பட்டதால் இன்று பெய்த மழை காரணமாக ரோட்டின் பல்வேறு பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கி நின்றன. மாநகராட்சி ஊழியர்கள் பல மணி நேரம் போராடி தண்ணீரை வெளியேற்றினர்.
புதிய தார்சாலை அமைத்து முடிக்கும் வரை சேரன்மாநகர் செல்லும் ரோட்டை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமம் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.