கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில், அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை யொட்டி "சமத்துவ நாள்" உறுதிமொழி ஏற்பு.

கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில், அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை யொட்டி "சமத்துவ நாள்" உறுதிமொழி மாநகராட்சி துணை ஆணையாளர் மரு. மோ.ஷர்மிளா தலைமையில் ஏற்கப்பட்டது.


கோவை: நாடு முழுவதும் பாரத ரத்னா, பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 132-ஆவது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில், அவரின் பிறந்த நாளை சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும் என்று நேற்று, தமிழக சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

அதன்படி, சென்னை அம்பேத்கர் மணி மண்டபத்தில் உள்ள அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின், சமத்துவ நாளுக்கான உறுதிமொழியை ஏற்றுக் கொண்டார். அதேபோல, இன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நடைபெற்று வருகிறது.

அதன்படி, கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில், அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை யொட்டி "சமத்துவ நாள்" உறுதிமொழி ஏற்கப்பட்டது.

மாநகராட்சி துணை ஆணையாளர் மரு. மோ.ஷர்மிளா தலைமையில் நடந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்வில்,

மாநகராட்சி உதவி ஆணையாளர்கள், சரவணன், அண்ணாதுரை, சுந்தரராஜன், மாநகராட்சி நகர்நல அலுவலர் சதீஷ்குமார், நகரமைப்பு அலுவலர் கருமத்தாள் மற்றும் உதவி செயற் பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...