கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில், அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை யொட்டி "சமத்துவ நாள்" உறுதிமொழி மாநகராட்சி துணை ஆணையாளர் மரு. மோ.ஷர்மிளா தலைமையில் ஏற்கப்பட்டது.
கோவை: நாடு முழுவதும் பாரத ரத்னா, பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 132-ஆவது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில், அவரின் பிறந்த நாளை சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும் என்று நேற்று, தமிழக சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
அதன்படி, சென்னை அம்பேத்கர் மணி மண்டபத்தில் உள்ள அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின், சமத்துவ நாளுக்கான உறுதிமொழியை ஏற்றுக் கொண்டார். அதேபோல, இன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நடைபெற்று வருகிறது.
அதன்படி, கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில், அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை யொட்டி "சமத்துவ நாள்" உறுதிமொழி ஏற்கப்பட்டது.
மாநகராட்சி துணை ஆணையாளர் மரு. மோ.ஷர்மிளா தலைமையில் நடந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்வில்,
மாநகராட்சி உதவி ஆணையாளர்கள், சரவணன், அண்ணாதுரை, சுந்தரராஜன், மாநகராட்சி நகர்நல அலுவலர் சதீஷ்குமார், நகரமைப்பு அலுவலர் கருமத்தாள் மற்றும் உதவி செயற் பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.
அதன்படி, சென்னை அம்பேத்கர் மணி மண்டபத்தில் உள்ள அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின், சமத்துவ நாளுக்கான உறுதிமொழியை ஏற்றுக் கொண்டார். அதேபோல, இன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நடைபெற்று வருகிறது.
அதன்படி, கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில், அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை யொட்டி "சமத்துவ நாள்" உறுதிமொழி ஏற்கப்பட்டது.
மாநகராட்சி துணை ஆணையாளர் மரு. மோ.ஷர்மிளா தலைமையில் நடந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்வில்,
மாநகராட்சி உதவி ஆணையாளர்கள், சரவணன், அண்ணாதுரை, சுந்தரராஜன், மாநகராட்சி நகர்நல அலுவலர் சதீஷ்குமார், நகரமைப்பு அலுவலர் கருமத்தாள் மற்றும் உதவி செயற் பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.