கோவையில் நீத்தார் நினைவு தினம் அனுசரிப்பு - பணியின்போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி

கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்தில் நீத்தார் நினைவு தூணிற்கு மேற்கு மண்டல இணை இயக்குநர், சத்தியநாராயணன், கோவை மாவட்ட தீயணைப்பு அலுவலர் அண்ணாதுறை, நிலைய அலுவலர் வேலுச்சாமி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலிச் செலுத்தினர்.


கோவை: பணியின் போது இறந்த, தீயணைப்பு துறை வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில், கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்தில் நீத்தார் நினைவு தினம், இன்று அனுசரிக்கப்பட்டது.



கடந்த 1944 ஏப்.14ல், மும்பை விக்டோரியா துறைமுகத்தில், நிறுத்தப்பட்டு இருந்த கப்பலில், திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க கடுமையாக போராடிய, தீயணைப்பு வீரர்கள் சுமார் 66 பேர் உட்பட, 220 பேர் பலியாகினர். அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில், நாடு முழுவதும், ஒவ்வொரு ஆண்டும், ஏப்.14ல், நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.



அந்த வகையில், இன்று தமிழகம் முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களில், 'தீ தொண்டு தினம்' என "நீத்தார் நினைவு தினம்" அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு ஒரு பகுதியாக, கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்தில் நீத்தார் நினைவு தூணிற்கு மேற்கு மண்டல இணை இயக்குநர் (கூடுதல் முழு பொருப்பு) சத்தியநாராயணன், கோவை மாவட்ட தீயணைப்பு அலுவலர் அண்ணாதுறை, நிலைய அலுவலர் வேலுச்சாமி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலிச் செலுத்தினர்.



இதே போல், அடுத்து வரும் ஒரு வாரத்திற்கு மேற்கு மண்டலத்திற்குட்பட்ட தொழிற்சாலை, கல்வி நிறுவனங்களுக்கு, தீ தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...