கோவையில் நீத்தார் நினைவு தினம் அனுசரிப்பு - பணியின்போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி

கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்தில் நீத்தார் நினைவு தூணிற்கு மேற்கு மண்டல இணை இயக்குநர், சத்தியநாராயணன், கோவை மாவட்ட தீயணைப்பு அலுவலர் அண்ணாதுறை, நிலைய அலுவலர் வேலுச்சாமி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலிச் செலுத்தினர்.


கோவை: பணியின் போது இறந்த, தீயணைப்பு துறை வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில், கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்தில் நீத்தார் நினைவு தினம், இன்று அனுசரிக்கப்பட்டது.



கடந்த 1944 ஏப்.14ல், மும்பை விக்டோரியா துறைமுகத்தில், நிறுத்தப்பட்டு இருந்த கப்பலில், திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க கடுமையாக போராடிய, தீயணைப்பு வீரர்கள் சுமார் 66 பேர் உட்பட, 220 பேர் பலியாகினர். அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில், நாடு முழுவதும், ஒவ்வொரு ஆண்டும், ஏப்.14ல், நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.



அந்த வகையில், இன்று தமிழகம் முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களில், 'தீ தொண்டு தினம்' என "நீத்தார் நினைவு தினம்" அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு ஒரு பகுதியாக, கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்தில் நீத்தார் நினைவு தூணிற்கு மேற்கு மண்டல இணை இயக்குநர் (கூடுதல் முழு பொருப்பு) சத்தியநாராயணன், கோவை மாவட்ட தீயணைப்பு அலுவலர் அண்ணாதுறை, நிலைய அலுவலர் வேலுச்சாமி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலிச் செலுத்தினர்.



இதே போல், அடுத்து வரும் ஒரு வாரத்திற்கு மேற்கு மண்டலத்திற்குட்பட்ட தொழிற்சாலை, கல்வி நிறுவனங்களுக்கு, தீ தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...