கோவையில் உள்ள நியாய விலை கடையில், பிரதமர் மோடி படம் மாட்டிய பாஜக தலைவர் அண்ணாமலை..!

நேற்று மாலை சித்ரா அடுத்த கோல்டு வின்ஸ், துரைசாமி நகரில் உள்ள நியாய விலை கடை ஒன்றில் பொதுமக்களிடம் மத்திய அரசு வழங்கும் திட்டங்கள் குறித்து விளக்கி பேசிய அண்ணாமலை, தொடர்ந்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் படத்தின் அருகே பிரதமர் மோடியின் படத்தை மாட்டினார்.


கோவை: பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கோவை வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நேற்று மாலை சித்ரா அடுத்த கோல்டு வின்ஸ், துரைசாமி நகரில் உள்ள நியாய விலை கடை ஒன்றிற்கு சென்றார். அங்கிருந்த பொதுமக்களிடம் மத்திய அரசு வழங்கும் திட்டங்கள் குறித்து விளக்கி பேசிய அவர், அதை தொடர்ந்துநியாயவிலை கடைக்குள் சென்று அங்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் படத்தின் அருகே பிரதமர் மோடியின் படத்தை மாட்டினார். 



இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே, தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் பிரதமர் மோடி படத்தை மாட்ட வேண்டும் என பாஜகவினர் வலியுறுத்தி வரும் நிலையில்,கோவை திருமலையம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு அலுவலகங்களுக்குள் பிரதமர் மோடியின் படத்தை பாஜகவினர் மாற்ற முயன்றதால் சலசலப்பு ஏற்பட்டது. 



இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் ஆலந்துறை அடுத்த பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் நுழைந்து பாஜக ஆதரவாளர்கள் பிரதமர் மோடியின் படத்தை மாட்டிய போது ஏற்பட்ட பிரச்சனையில் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, ஒருவரை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...