அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் தனியார் பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தாய் போலீசில் புகார் அளித்தார்.
கோவை: கிணத்துக்கடவு பழைய செக்போஸ்ட் பகுதியில் தனியார் பேருந்து படிக்கட்டு வழியாக தவறி விழுந்த கல்லூரி மாணவன் படுகாயம் அடைந்தார்.
உடுமலைப்பேட்டை இராவணபுரம் இந்திராநகர் பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ் என்பவரின் மனைவி கனகமணி இவரது மகன் நந்தகுமார்(21) கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்தநிலையில் கடந்த 9ம் தேதி மாலை கோவையிலிருந்து உடுமலைக்கு தனியார் பேருந்தில் ஏறி வந்தார்.
கிணத்துக்கடவு பழைய செக்போஸ்ட் அருகே பேருந்து வந்து கொண்டிருக்கும்போது திடீரென படிக்கட்டு வழியாக நந்தகுமார் தவறி கீழே விழுந்தார்.
இதில் நந்தகுமாருக்கு கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நந்தகுமாருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காகப் பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் தனியார் பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிணத்துக்கடவு காவல்நிலையத்தில் நந்தகுமாரின் தாய் கலாமணி இன்று புகார் அளித்தார்.
புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உடுமலைப்பேட்டை இராவணபுரம் இந்திராநகர் பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ் என்பவரின் மனைவி கனகமணி இவரது மகன் நந்தகுமார்(21) கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்தநிலையில் கடந்த 9ம் தேதி மாலை கோவையிலிருந்து உடுமலைக்கு தனியார் பேருந்தில் ஏறி வந்தார்.
கிணத்துக்கடவு பழைய செக்போஸ்ட் அருகே பேருந்து வந்து கொண்டிருக்கும்போது திடீரென படிக்கட்டு வழியாக நந்தகுமார் தவறி கீழே விழுந்தார்.
இதில் நந்தகுமாருக்கு கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நந்தகுமாருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காகப் பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் தனியார் பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிணத்துக்கடவு காவல்நிலையத்தில் நந்தகுமாரின் தாய் கலாமணி இன்று புகார் அளித்தார்.
புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.